Friday, July 20, 2007

முதலாளிகள் பார்ப்பனர்களாக இருந்தால் அது பார்ப்பன பத்திரிகை என்று முத்திரை குத்துவதா?

தினமலர்பத்திரிகையை பார்ப்பனர்கள் பத்திரிகை என்று கூறுவது சிலருக்கு வாடிக்கையாகி விட்டது. ஆனால் முதலாளிகள் பார்ப்பனர்களாக இருக்கலாம்; ஆனால் அங்கு முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அனைவருமே மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இன்று நேற்றல்ல அந்த பத்திரிகை துவங்கிய நாளிலிருந்தே அதில் முக்கிய பதவிகளை வகித்த பலரை எனக்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களில் சிலருடைய பெயர்களையும் அவர்கள் வகித்த பதவிகளையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். துவக்க காலத்தில் தினமலரில் செய்திப் பிரிவு பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் திரு. மைக்கேல், பாலகிருஷ்ணன், உமைதாணு. அதன் பிறகு தற்போது திரு. இளங்கோவன், திரு. லெனின், திரு. பால்ராஜ், திரு. ரமேஷ்குமார், என்று பலரும் செய்திப்பிரிவு மற்றும் நிருபர் பிரிவு பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள். இன்று உங்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான தினமலர் இணை தளப் பொறுப்பாளரும் பிராமணர் அல்ல. இதேபோல் அலுவலக நிர்வாகிகளாக திரு. பீட்டர், திரு. அமல்ராஜ், திரு. பாலமுருகன் போன்றவர்கள் பணி புரிந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் இன்றும் அதே பொறுப்பில் இருந்து வருகிறார்கள். தொழில்நுட்ப பிரிவிலும் திரு. ஜோசப் போன்றவர்கள் இருக்கின்றனர். புகைப்பட நிபுணர்களாக விளங்குபவர்கள் திரு. முருகராஜ், திரு.சாதிக்.விற்பனை பிரிவில் பணியாற்றியவர்கள் திரு. சாலமன் ஜெபராஜ் போன்றவர்கள். இதைöல்லாம் ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் தினமலர் நாளிதழில் பணியாற்ற திறமை மட்டும்தான் தேவை; பிராமணர் என்ற ஜாதியில்லை என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

2 comments:

Deepak Vasudevan said...

"திங்களைப் பார்த்து நாய் குரைத்தாற் போன்று" என்ற புறநானூறு சொல்லுக்கு தினகரன் குழுமம் ஒரு கவின்மிகு உதாரணம்.

PRINCENRSAMA said...

ஐயோ!ஐயோ!
உங்களைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. நிருபர் பணிக்கு ஆள் எடுக்கும் போது, என்ன ஜாதி என்பதை கேள்வி பதில் பகுதியில் கேட்ட தினமலரைத் தெரியாதா?